தேவகோட்டை வள்ளியப்பச் செட்டியார் ஊரணி அருகே குடியிருப்பவர் செல்லமணி. கடந்த 2001 ஜூன் 23 ந்தேதி இரவு இவரது மகன் புரோஸ்கான் மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். இதே ஊரைச் சேர்ந்த அசோக், கண்ணன், விஜயன் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்து புரோஸ்கானை அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.பலத்த காயங்களுடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.போலீசார் அசோக்,கண்ணன், விஜயன் மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த உதவி செசன்ஸ் நீதிபதி தனியரசு மூவருக்கும் தலா மூன்று வருடம் ஜெயில் தண்டனையும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.