மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தல்

தேவகோட்டையில் சில பள்ளிகளில் சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் ஜாதி ரீதியிலான மோதல்களைத் தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக கல்லூரி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதும், பின்னர் அப் பிரச்னை தாற்காலிகமாக தீர்க்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளன.

ஆனால் பள்ளி மாணவர்களிடையே இந்த சிந்தனை வளரவிடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், தேவகோட்டையில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியாக ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.சமீபத்தில் ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கிள் செயினால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப் பிரச்னை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.