தேவகோட்டை ஆற்றில் மணல் குவாரி துவங்கியது

தேவகோட்டை மணிமுத்தாறில் எழுவங்கோட்டை கிராமத்தையொட்டி குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. கடந்த வாரம் பொதுப்பணித்துறையினர் மணல் அள்ளியபோது கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததை தொடர்ந்து சிவகங்கையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததில் அரசு விதிமுறைப்படி மணல் அள்ளுவதென முடிவு செய்யப்பட்டது. 3 அடி ஆழத்திற்கும், அரசு நிர்ணயித்த கட்டணமான ஒரு யூனிட் ரூ. 320 க்கு மணல் ஏற்றுவதென முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து உதவி பொறியாளர் பஞ்சவர்ணம் மேற்பார்வையில் நேற்று காலை முதல் மணல் குவாரி துவங்கியது.

அரசின் கட்டணத்திலேயே லாரி, டிராக்டர்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. டிராக்டரில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 320 ம், லாரிகளுக்கு இரண்டு யூனிட் ரூ. 627. 40 பைசாவிற்கு ரசீது போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. சிலர் டி.டி.,க்களை எடுத்து வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்க முயற்சி செய்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே போலீசார் தலையிட்டு தடுத்தனர். பொதுபணித்துறையினரிடமே பணம் செலுத்தி ரசீது போடப்பட்டது.உதவி கோட்ட செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.நேற்று மாலை ஏராளமான லாரி,டிராக்டரில் மணல் அள்ளி செல்லப்பட்டது.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

எழுவங்கோட்டை ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு

தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின், புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசே மணல் குவாரியை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் நேற்று “பொக்லைன்’ இயந்திரம் மூலம் மணல் எடுக்கும் முயற்சி நடந்தது. அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் மணல் அள்ளியதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் எனக்கூறி, எழுவங்கோட்டை, போரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள், மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு சென்ற தாலுகா இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். ஊராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், அணைக்கட்டில் மணல் அள்ள தடை இருந்தும், மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆற்றில் இரண்டு ஆழ்குழாய் கிணறு போட்டுள்ளோம். ஆற்றை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில், மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.

தேவகோட்டை ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் கூறுகையில்,”" எழுவங்கோட்டை மணல் குவாரியை அரசே ஏற்று நடத்துகிறது. தனியாக யாருக்கும் குத்தகை தரவில்லை. மணல் தட்டுப்பாட்டை போக்க, நேற்று முன்தினம் முதல் இங்கு, அரசு மணல் குவாரி துவக்கியுள்ளது. இதில் தனியார் தலையீடு இல்லை. இது குறித்து அக்கிராம மக்களிடம் எடுத்து கூற உள்ளேன்,” என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்

தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் டிராக்டர் டிரைவர் மீது தாக்குதல்: கணவன்-மனைவி மீது வழக்கு

தேவகோட்டை கீழசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் டிராக்டரில் மணல், கற்கள் லோடு அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் காரைக்குடியை சேர்ந்த ராமநாதன் என்பவர் வீட்டிற்கு மணல் சப்ளை செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று ரவிச்சந்திரன் கள்ளல் என்ற இடத்தில் டிராக்டர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமநாதன் அவரது மனைவி ஜோதி ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். 2 பேரும் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், ராமநாதன் அவரது மனைவி ஜோதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow

Get every new post delivered to your Inbox.