கொங்கிவயல் ஸ்ரீமுத்துகருப்பைய்யா ஆண்டவர்

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

மகான்கள் முதலில் மனிதர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். சாதாரண வாழ்க்கையில் உழன்று, அதில் இருக்கக் கூடிய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த பிறகே, அற்புதங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்கின்றன. இள வயது பருவம் முடிந்ததும், ‘நாம் என்ன ஆக வேண்டும்?’ என்று நாம் விருப்பப்படலாம்; தப்பில்லை. ஆனால், தீர்மானிக்கின்ற உரிமை நம்மிடத்தில் இல்லை. இது இறைவனின் விருப்பம்.

அதுபோல்தான் கொங்கிவயல் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் கள்ளர் இனத்தில் பிறந்தவர் – முத்துகருப்பைய்யா (நகரத்தார்கள் ஊரான தேவகோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கொங்கிவயல்). தற்போது இவர் இதே ஊரில் முத்துகருப்பைய்யா ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார். ஆண்டவர் சுவாமிகளின் 74-ஆம் ஆண்டு குருபூஜை கடந்த 9.12.09 அன்று நடந்துள்ளது. ஆண்டவர் சுவாமிகளின் பக்தர்களுக்கு இது ஒரு மாபெரும் திருவிழா.

ஆடு மாடுகள் மேய்த்து, வயல்வேலைகளைப் பார்த்து வந்த குடும்பம். இறைவன் முத்துகருப்பைய்யாவை ஆட்கொள்ள வேண்டிய வேளையும் வந்தது. கொங்கிவயல் கிராமத்துக்கு அருகே ஒரு சாயபு வசித்து வந்தார். இவர் பார்க்கத்தான் சாதாரணமாக இருப்பாரே தவிர, இறை அருள் நிரம்பப் பெற்றவர். பல ஸித்துக்கள் கைவரப் பெற்றவர். இது கொங்கிவயல் கிராமத்தில் வசிக்கும் பலருக்கேகூடத் தெரியாது. கிராமத்தில் வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுத்து உண்பார். பலரும் இவருக்கு ஒரு பிடி அரிசியும், ஒரு பைசா நாணயமும் கொடுப்பர். இதை வழக்கமாகக் கொண்ட பல குடிமக்களும் உண்டு. இப்படிப் பிச்சையாகக் கிடைத்ததை வைத்து கிராமத்தின் ஒரு எல்லையில் அவற்றைச் சமைத்து உண்பார். அதோடு, எஞ்சி இருக்கும் உணவை அந்த வழியே செல்லும் மற்ற மக்களுக்கும் வழங்குவார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பெண்ணை கட்டிபோட்டு நகை கொள்ளை: பெரியகாரையை சேர்ந்த 2 பேர் கைது

காரைக்குடி : காரைக்குடியில், பத்திரிகை தரவேண்டும் எனக்கூறி, வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 18.5 பவுன் நகை திருடிய, இருவரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணியபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் அம்பலம். இவரது மனைவி புஷ்பவள்ளி (46). கணவர் மலேசியாவில் இருப்பதால், தாய் லட்சுமியுடன் வசிக்கிறார். ஏப்., 29ம் தேதி பகல் 12 மணிக்கு, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் திருமண பத்திரிகை தரவேண்டும் எனக்கூறி வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு தனியாக இருந்த புஷ்பவள்ளியிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அவரை கயிறால் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 18.5 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரித்தார்.

நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை ரஸ்தாவில், வாகன சோதனை நடந்தது. அவ்வழியாக டூவீலரில் வந்த வேகோட்டை பெரியகாரையை சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ் (32), ராமநாதன் மகன் முத்துக்குமாரை (29) சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும், புஷ்பவள்ளியை கட்டி போட்டு திருடியதாக தெரிவித்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, 18.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Follow

Get every new post delivered to your Inbox.