மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தல்

தேவகோட்டையில் சில பள்ளிகளில் சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் ஜாதி ரீதியிலான மோதல்களைத் தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக கல்லூரி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதும், பின்னர் அப் பிரச்னை தாற்காலிகமாக தீர்க்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளன.

ஆனால் பள்ளி மாணவர்களிடையே இந்த சிந்தனை வளரவிடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், தேவகோட்டையில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியாக ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.சமீபத்தில் ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கிள் செயினால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப் பிரச்னை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

பள்ளிகளில் இடம் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் தவிப்பு

தேவகோட்டை : தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டுவதால், இடம் கிடைக்காமல் பெற்றோர் தவிக்கின்றனர். தேவகோட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. கிராமபுற மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிப்பிற்கு கூடுதல் செலவானாலும் தேவகோட்டை நகரில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். அனைவரும் நகர் பகுதிக்கு வருவதால் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அரசு பள்ளிகள் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத நிலை உள்ளதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடப்பது தொடர்கிறது. நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது பற்றி பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதே மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் காரணமாக மைக் மூலம் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

ஆசிரியர்கள் எவ்வளவு தான் சப்தமாக பாடம் நடத்த முடியும். மாணவர்களை சேர்க்கும் அளவிற்கு பள்ளிகளில் வசதிகளை செய்ய வேண்டியது உள்ளது. அரசு பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், அங்கும் மாணவர்களை பெற்றோர் சேர்க்க தயங்குகின்றனர் என்றார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.