புது மாப்பிள்ளை பலி

தேவகோட்டை செல்லப்பசெட்டியார் கோயில் தெற்கு வீதியில் வசிப்பவர் பஞ்சநாதன். இவரது மகன் சிவக்குமார் (28). இவருக்கு கடந்த மே 8 ந்தேதி திருமணம் நடந்தது. நேற்று மதியம் சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கரூர் டாஸ்மாக் பாரில் வேலைபார்க்கும் நண்பர் பிரபுவுடன் புளியால் கிராமத்திற்கு விருந்துக்கு சென்றார். புளியால் பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது தேவகோட்டைக்கு வந்த டிராக்டர் மோதியது. சிவக்குமார் ஹெல்மெட் அணியாததால் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு பலத்த காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Follow

Get every new post delivered to your Inbox.