புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க மோதல்

தேவகோட்டை சருகணி ரோட்டில் சாத்திக்கோட்டை காலனி உள்ளது.இதன் அருகே அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்தாண்டு காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி முத்தாத்தாள் இந்த இடத்தில் பட்டா கேட்டு அரசுக்கு மனு செய்தார். சில வாரங்களுக்கு முன்பு அதே காலனியைச் சேர்ந்த சுப்பையா அந்த இடத்தில் கொட்டகை போட்டார். ரவிச்சந்திரன் மகன் ராமு மனித உரிமை அமைப்பு என்ற போர்டை நேற்று மதியம் அந்த இடத்தில் வைத்தார். நேற்று இந்த இடம் தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போர்டை சுப்பையா கோஷ்டி எடுத்து வீசியதாகவும், கொட்டகையை ரவிச்சந்திரன் கோஷ்டி பிரித்து வீசியதாகவும் இருவரும் தனித்தனியாக தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

எஸ்.ஐ.,க்கள் மீனாட்சிசுந்தரம், கருப்பையா ஆகியோர் ரவிச்சந்திரன் மகன்கள் ராமு, லட்சுமணன், மணிகண்டன் சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர். மூவரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பு, மகள் மேகலா, காளியம்மாள், கல்யாணி, சக்திவேல்,சுப்பையா ஆகியோரை தேடி போலீசார் வருகின்றனர்.

Follow

Get every new post delivered to your Inbox.