கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

கடத்தி வரப்பட்ட மூன்று குழந்தைகளுடன் தப்பிய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள சருகணிக்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை வண்டியூரைச் சேர்ந்த தேவி என்பவர், 3 வயதுள்ள குழந்தை, ராஜ்குமார் (13), ரோஜா(12) ஆகியோருடன் வந்துள்ளார். ராஜ்குமார், சரோஜாவை அங்குள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்துள்ளார். விடுதியில் ராஜ்குமார் மற்றொரு மாணவரின் கடிகாரத்தை திருடியுள்ளார். நிர்வாகத்தினர், ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே குற்றங்கள் செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்ததும், இவரை விட்டு சென்ற பெண் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும், அந்த பெண்ணிடமிருந்த குழந்தை மதுரை வண்டியூரில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் அந்த பெண்ணை பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, ராஜ்குமார், சரோஜாவை பள்ளியை விட்டு நீக்கி சான்றிதழ் வழங்கி அனுப்பினர். அந்த பெண்ணை சருகணி கிராமத்தினர், சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த பெண் குழந்தைகளுடன் தப்பி விட்டார். விசாரணையில் தப்பிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் மீசலில் உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்து, போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தேவகோட்டை அருகே ஆலய சிலை உடைப்பு

தேவகோட்டை : தேவகோட்டை அருகே ஆலய கதவை உடைத்து சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை அருகே உள்ள வெள்ளிக்கட்டியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஞானபிரகாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிதைந்து போனதால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஓடுகளால் ஆன சிறு ஆலயம் கட்டப்பட்டது. பெரிய கோயிலிலிருந்து 4 அடி உயர ஞானபிரகாசியார் சிலை கொண்டு வரப்பட்டு இங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இக்கோயிலின் முழு நிர்வாகத்தையும் இந்துக்களே நிர்வகித்து வழிபடுகின்றனர். ஜூன் 21ம் தேதி சிறப்பு திருவிழா நடத்துவது வழக்கம். அப்போது மட்டும் சருகணி பங்கு பாதிரியார் சிறப்பு பூஜைகளை நடத்துவார்.

இந்த ஆலயத்தில் கிடா வெட்டி பூஜை நடத்துவதும் வழக்கம். நேற்றுமுன்தினம் மாலை வழிபாடு நடத்தி விட்டு கிராம மக்கள் சென்று விட்டனர். நேற்று இந்த ஆலய கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஞானபிரகாசியார் சிலையையும் சேதப்படுத்தி இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். இது குறித்து திருவேகம்பத்தூர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிரியார் சார்லஸ் கூறியதாவது: வெள்ளிகட்டி கிராமத்தில் சருகணி கோயிலை கட்டிய ஜேம்ஸ் டிரோசி சாமியார் தான் அந்த கோயிலையும் கட்டி உள்ளார். சுமார் 300 ஆண்டு இருக்கலாம். அவரே உருவாக்கிய சிலை தான் இது. முழுக்க முழுக்க இந்து மதத்தினரே நிர்வகிக்கின்றனர். சமூக விரோதிகள் சிலையை உடைத்திருக்கலாம் என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க மோதல்

தேவகோட்டை சருகணி ரோட்டில் சாத்திக்கோட்டை காலனி உள்ளது.இதன் அருகே அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்தாண்டு காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி முத்தாத்தாள் இந்த இடத்தில் பட்டா கேட்டு அரசுக்கு மனு செய்தார். சில வாரங்களுக்கு முன்பு அதே காலனியைச் சேர்ந்த சுப்பையா அந்த இடத்தில் கொட்டகை போட்டார். ரவிச்சந்திரன் மகன் ராமு மனித உரிமை அமைப்பு என்ற போர்டை நேற்று மதியம் அந்த இடத்தில் வைத்தார். நேற்று இந்த இடம் தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போர்டை சுப்பையா கோஷ்டி எடுத்து வீசியதாகவும், கொட்டகையை ரவிச்சந்திரன் கோஷ்டி பிரித்து வீசியதாகவும் இருவரும் தனித்தனியாக தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

எஸ்.ஐ.,க்கள் மீனாட்சிசுந்தரம், கருப்பையா ஆகியோர் ரவிச்சந்திரன் மகன்கள் ராமு, லட்சுமணன், மணிகண்டன் சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர். மூவரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பு, மகள் மேகலா, காளியம்மாள், கல்யாணி, சக்திவேல்,சுப்பையா ஆகியோரை தேடி போலீசார் வருகின்றனர்.

Follow

Get every new post delivered to your Inbox.