தேவகோட்டை : காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(17). புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சுப்புராஜூவுடன் டி.என். 63 பி.4734 எண்ணுள்ள டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக்கில் உஞ்சனையில் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.
திரும்பி வரும் போது உஞ்சனை மாத்தூர் ரோட்டில் பைக் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்தனர். சுப்புராஜூ சம்பவ இடத்தில் பலியானார். அருண் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறாவயல் எஸ்.ஐ. அர்ச்சுணன் பொறியியல் துறை மாணவர் அருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.