சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டாக்டர் செபாஸ்டியான் அன்னம்மாள் மக்கள் கல்லூரியில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேதகு ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் கல்வி சேவை அறக்கட்டளை மற்றும் மனித உரிமைகள் கழகம், ஒய்ஸ்மென் கழகம் சார்பில் நடைபெற்ற, இவ் விழாவுக்கு காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.
ஆனந்தா கல்லூரி செயலாளர் சூசைமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகாடி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ராமநகர் பங்குத்தந்தை முனைவர் சந்தியாகு, வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் வலம்புரி சவரிமுத்து ஆகியோர் பேசினர்.
300 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ பேசியது:வறுமையால் சில மாணவ மாணவிகள் கல்வியை தொடர முடியாமல் உள்ளனர். இந்நிலையை மாற்ற தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்விக்காக தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், காளிமுத்துசேர்வை, நகர்மன்ற உறுப்பினர் செல்லமுத்து, காரை மோகன், சுந்தரலிங்கம், சுப.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மக்கள் கல்லூரி துணைத் தலைவர் மகபூப்பாட்சா வரவேற்றார். தலைவர் போஸ்கோ நன்றி கூறினார்.